Sathish Speaks

sathishkumar

8 simple steps to achieve your goal of earning ₹1 crore with practical strategies for success.

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ தொலைக்காட்சி வரலாற்றில் ‘கௌன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சியாகும். நிறைய தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆவதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் ஒரு பெரிய தொகையை வெற்றியாளருக்கு பரிசாக அளிப்பார்கள். 5 கோடி ரூபாய் வரைக்கும் பரிசளிப்பார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி என்பது எல்லோரின் கனவாக இருக்கும். ஆனால் எல்லோராலும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று ஒரு கோடி ரூபாய் வெல்வது சாத்தியமற்றது. யாராவது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.ரூ. 1 கோடி இலக்கு…! வாழ்க்கையில், நீங்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்றால், கீழ்க்காணும் எட்டு படிகளை பின்பற்றினால் போதும். ஒரு கோடி ரூபாயை நிச்சயம் உங்களால் அடைய முடியும். படி 1:  முதலில் சேமிப்பு, பிறகு செலவுகள்..! நமக்கு சம்பளம் வரும்போது, செலவுகளை செய்கிறோம். 25,000 ரூபாய் சம்பளத்தில், 23,000 ரூபாய் செலவு செய்கிறோம்.. மீதி ரூ.2000. (வருமானம் – செலவுகள் = சேமிப்பு) – இதைத்தான் நாம் சேமிக்கிறோம். இப்படி செய்வது தவறாகும். இதற்கு பதில், வருமானம் – சேமிப்பு = செலவுகள் இப்படித்தான் நாம் தொடங்க வேண்டும். வருமானம் எப்படி முன்கூட்டியே நிலையானதாக இருக்கிறதோ, அப்படியை சேமிப்பையும், செலவுகளையும் நிலையானதாக முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.வழக்கமான, உங்களின் வருமானத்தில் 60 சதவிகிதம் வீட்டுச் செலவுகள் ஆகும். 20 சதவிகிதம் நீண்ட கால முதலீடு, 20 சதவிகிதம் குறுகிய கால சேமிப்பு. இப்படி ஒரு கணக்கு வைத்துக் கொள்ளலாம். இப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், 80% வீட்டுச் செலவுகள் என்றும், 10 % நீண்ட கால சேமிப்புக்கும், 10% குறுகிய கால சேமிப்புக்கும் ஒதுக்கிவிடலாம். ஆனால், இப்படி ஏதோவொரு விகிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து விட வேண்டும். உதாரணமாக, ரமேஷ், மகேஷ் என்று இருவர் இருக்கிறார்கள்.  ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இருவரில் யார் பணக்காரர் என்று கேட்டால், எல்லோரும் 50000 சம்பாதிக்கும் ரமேஷ் தான் பணக்காரர் என்று சொல்வோம்.  ஆனால், ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும், 10% அதாவது 5000 ரூபாய்தான் முதலீடு செய்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதித்தாலும், 20% அதாவது 5,000 ரூபாய் முதலீடு செய்கிறார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்றார் 20 % சேமிக்கும் மகேஷ் தான் பணக்காரர். ஆகையால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், சம்பளம் வரப்போகிறது என்றால், சேமிப்புக்கு எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடுங்கள். அதை  நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் வர வேண்டும் என்பதாக முதலீடு செய்ய வேண்டும். படி 2: வாழ்க்கையும் வாழ்க்கை முறையும்..! உங்களின் வாழ்க்கையை (Life) மேம்படுத்துங்கள். உங்களின்  வாழ்க்கைமுறையை (Lifestyle) லைஃப்ஸ்டைலை மேம்படுத்தாதீர்கள். நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாழ்வதாகும். என் நண்பன் அந்த பிராண்டடு விலை உயர்ந்த போனை வாங்கிவிட்டான். என் நண்பன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி விட்டான். இதுபோல நிறைய ஒப்பீடு செய்து பார்த்தல் கூடாது. பதவி, அதிகாரம், பணம், லைஃப்ஸ்டைல் போன்ற எல்லாவற்றிலும் ஒரு போட்டி மனப்பான்மை நமக்குள் வந்துவிட்டது. மற்றவர்களுடன் ஒப்பிட்டே நம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கல்லூரியில் படித்து முடிக்கும் வரைதான் எல்லோருக்கும் ஒரே கேள்வித்தாள். அங்கு, அடுத்தவர் விடைத்தாளை பார்த்து எழுதினாலும் உங்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் எல்லோருக்கும் வெவ்வேறான கேள்வித்தாள் தான். ஆகையால், மற்றவர்களை பார்த்து நீங்கள் பின் தொடர வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை யோசிப்பதுதான் படி 2. படி 3: அவசர செலவுகளை சமாளிக்க தயாராக இருப்பது கோவிட் 19  வந்து போனது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு. இதுபோல நிறைய எதிர்பாராத இழப்புகள் வருவதற்கு  வாய்ப்பு இருக்கும். இதுபோல எதிர்பாராத செலவுகள் வரும்போது, கடனை பலரும் வாங்கித்தான் செலவு செய்கிறோம். குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்துக்கான செலவு தொகையையாவது  ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில், எமெர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமாகும். இதுதான் தனிநபர் நிதியின் (personal finance) அடிப்படையாகும். படி 4 மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு..! வாழ்க்கையில் காப்பீடு எடுப்பது மிக முக்கியமானதாகும்.நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்தக் கம்பெனி ஒரு மருத்துவக் காப்பீடு  அதிக கவரேஜ் தொகைக்கு கொடுக்கிறது என்றால், நீங்கள் தனியாக பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் பிரச்னைகள் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விபத்துகள் நடக்கலாம். இதுபோல நடக்கும்போது 75% பேர் கையில் இருந்துதான் பணத்தை செலவு செய்கிறார்கள். அதுவும் கடன் வாங்கிதான் செய்கிறார்கள். இதனை தவிர்க்க மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும். ஒருவர் குடும்பத்தை வழி நடத்துபவராக இருந்தால், வாழும் போது குடும்பத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவார்கள். துரதிஷ்டவசமாக வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும் சூழ்நிலை வருகிறது. இப்போது, குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேவைகள் சமரசமாகி விடக்கூடாது. அதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரெஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், குடும்பத்தினரின் நிதித் தேவைகள் நிச்சயமாக பூர்த்தியாகும் எனலாம். படி 5: தெளிவான செலவு திட்டம் தேவை.! இது மிக முக்கியமானதாகும். 50% பிரச்னைகள் எப்படி தீரும் என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் தெளிவாக தெரிந்துகொண்டால் மிகப்பெரிய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். நீண்ட  கால முதலீட்டில் (long term) என்ன வேண்டும், குறுகிய கால (short term) முதலீட்டில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக பிரித்துக் கொள்ளுங்கள். குறுகிய கால முதலீடு என்பது மூன்று வருடங்களுக்குள்ளாக, மொபைல் போன், கார், சுற்றுலா போன்றவையாகும். இதற்கு வருடத்தின் செலவுகளில் 5%, 7% 10% இப்படி ஒரு தொகையை தீர்மானித்துவிட்டால், முடிவு எடுப்பது மிகவும் எளிதாகிவிடும். நம் குடும்பத்தினரிடம் சொல்லிவிடலாம். இவ்வளவுதான். இந்த தொகைக்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் என்று சொல்லிவிடலாம். நீங்கள் இப்படி ஒரு தொகையை தீர்மானிக்கவில்லை என்றால், உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தேவையில்லாமல் அதிக பணம் செலவாகக் கூடும். . அதேபோல, நீண்ட கால திட்டங்கள், ஓய்வுகால திட்டங்களில், நான் ஓய்வு பெறும்போது சொந்த வீட்டில்தான் இருப்பேன். நான் 2040-ம் வருடத்தில் ஓய்வு பெறுவேன். அப்போது முதலீடுகள் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வரும். இப்படி ஒரு தெளிவு திட்டம் இருந்தது என்றால், இன்றைக்கு நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பது தெளிவாகும். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் இன்ஜினீயரிங் படிப்பதற்கு நானே அவனுக்கு செலவு செய்வேன். ஆனால், அவன் வெளிநாட்டில் படிக்கிறேன் என்றால், கண்டிப்பாக நான் செலவு செய்ய மாட்டேன். ஸ்காலர்ஷிப் அல்லது கல்விக் கடன் வாங்கி தான் படிக்க வைப்பேன். இந்த மாதிரி முடிவை தெளிவாக எடுத்து, அவனிடமும் சொல்லிவிட்டால், அவனும் ஒரு மாற்று வழியை யோசித்து வைத்திருப்பான். ஆகையால், நீண்ட கால முதலீட்டுக்கு, எது எனக்கு வேண்டும், எதை என்னால் பண்ண முடியும், எது எனக்கு கூடுதல் செலவு என்பதை தெளிவாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களானால் மிகவும் நல்லது. படி 6: நமக்காக மற்றவர்களை முதலீடு செய்ய வைக்கலாம்.இந்தியாவில் இருக்கும் சிறந்த மனிதர்களை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். அம்பானி, அதானி போன்ற நிறைய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களுக்கு வேலை செய்வார்கள்? இதற்கு பெயர்தான்`பங்கு முதலீடு (stock investing). உங்களுடைய சேமிப்பை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது, பணவீக்கதை விட இரண்டு மடங்கு வருமானம் வருவதற்கு  அதிக பெரிய வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கம் 6-7 % என்றால் 12-14 % உங்களுக்கு வருமானம் வரும். ஆகையால், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய தொடங்குங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  சிறந்ததாகும். படி 7: எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவு…! பணத்தை கொண்டு வருமானம் ஈட்ட எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.  திரிலான தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்றவற்றால் பலரும் பணத்தை அதிகமாக இழக்கிறார்கள்.  பேராசை மற்றும் பயம் இந்த இரண்டும் வந்துவிட்டால், நம்முடைய பொது அறிவை இழக்கிறார்கள். எஃப்&ஓ-வில் முதலீடு செய்து, ஒரு பெரிய தொகையை சேர்த்து விட்டேன் என்று சொல்லும் யாரையாவது, தனிப்பட்ட முறையில்  தெரியுமா உங்களுக்கு?அப்படிப்பட்டவர்களை கண்ணில் பார்த்துள்ளீர்களா? யாரோ ஒருவர் டெலிகிராம் சேனலில், வாட்ஸ் அப் சேனலில் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று, அதற்கு பின்னால் சென்று முதலீடு செய்து, மொத்த பணத்தையும் இழந்தவர்களை, பலப்பல பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால், எதைச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். படி 8: செயலில் இறங்குங்கள்..! எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்க மாட்டேன், செயல்படுத்த மாட்டேன் என்றால், நீங்கள்தான் ஒரு பெரிய முட்டாள். ஏனென்றால், அறிவாளி, திறமையானவர் என்றால், நிறைய ஐடியாக்கள் இருந்தாலும், அதை செயல்படுத்தினால்தானே உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.  செயல்படுத்தாமல், அடுத்த மாதம் செய்யலாம்; ஆறு மாதம் கழித்து செய்யலாம் அல்லது சம்பளம் உயரும் போது செய்யலாம் என்று தள்ளிப்போட்டால் அது தவறு. 25 வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 35 ஆண்டுகளுக்கு அவரின் 60 வயது வரைக்கும் முதலீடு செய்து வந்தால், முதலீட்டுக்கு ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால் ரூ.1 கோடிக்கு மேல் சேர்ந்துவிடும்.சீக்கிரமாக ஆரம்பித்து முதலீடு செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானதாகும். அவசரக் கால நிதியை உருவாக்குங்கள், காப்பீடுகளை எடுங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொண்டு செயலில் இறங்குகள்.  இந்த எட்டு படிளை  பின்பற்றுங்கள். நீங்கள் கண்டிப்பாக கோடீஸ்வரராக சீக்கிரமே ஆகலாம். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..! Read More »

7 critical mistakes to avoid for boosting your wealth value, paired with expert tips for financial growth.

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ ஒரு சரியான நிதி திட்டமிடலை உருவாக்குவது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு  அந்த நாம் செய்யும் சில தவறுகளையும் மாற்றிக் கொள்வதாகும்.  அது மிகப் பெரிய நிதி இலக்குகளை (Finance Goals) கூட எளிதில் அடைய உதவிகரமாக இருக்கும். தவறுகளை திருந்தி கொள்வது உங்கள் செல்வத்தின் (Wealth) மதிப்பை அதிகரிக்க மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை அறியாமலேயே சில தவறுகள் செய்கின்றனர். இது அவர்களையும் அறியாமல் அவர்களின்  செல்வத்தின்  மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தவறுகளை சரி செய்து கொண்டாலே, பணத்தை சரியாக  நிர்வகிக்க முடியும்.  பொதுவாக, பலரும் செய்யும்  ஏழு  முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம். 1 சமூக அஸ்தஸ்துக்காக அதிக செலவு..! இன்றைய கால கட்டத்தில் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று, சமூகத்தில் தங்கள் அஸ்தஸ்து உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகும்.  தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, கார் வரையில் மிக விலை உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களின் நிதி தகுதிக்கு மீறி அதிக செலவு செய்கிறார்கள். இதை தவிர்த்து தங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப  வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். யாரோ  நண்பர், உறவினர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அதிக விலை கொடுத்து நாமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது பலரும் செய்யும் மிக முக்கியமான தவறுகளில் ஒன்று. 2 வெளி உணவுகளை தவிர்த்தல்..! இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வரும் ஒரு மோசமான பழக்க வழக்கங்களில் ஒன்று,பெரும்பாலும் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் வித விதமான உணவகங்களே  இதற்கு சாட்சி. கடையில் சாப்பிடுவது என்பது மக்களின்  அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது எனலாம். இன்றைய நடுத்தர குடும்பங்கள் தொடங்கி,பணக்கார குடும்பங்களில் வரையில் தவிர்க்க வேண்டிய இந்த வழக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது குடும்ப செலவில் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கும். உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளியில் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை குறைந்துக் கொண்டாலே நம்மால் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தி, முதலீடு செய்து செல்வம் சேர்க்க முடியும். 3 பிராண்டடு பொருள்களுக்காக அதிகமாக செலவிடுதல்..! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆடைகள், ஷீக்கள், பெல்ட்கள், நாம் முடிவெட்டும் சலூன்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை பிராண்டு ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். போதிய பண வசதி இல்லை என்றாலும் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் என பெரிய பிராண்டடு பொருள்களை தகுதிக்கு மீறிய அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே வந்திருக்கிறது. இப்படி செய்வதால் முதலீட்டுக்கான தொகை குறைந்து செல்வம் சேர்வது, நிதி இலக்குகள் நிறைவேறுவது தடைபடுகிறது. 4 சுற்றுலாவுக்காக அதிக செலவு..! சமீப காலமாக மக்களிடையே பரவி வரும் மற்றொரு விஷயம், சுற்றுலா செல்வதற்காக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில், தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குழந்தையின்  உயர் கல்வி, மருத்துவ செலவு,  கார், சொந்த வீடு  போன்றவற்றுக்காக தனித் தனியாக எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்து வருபவர்கள், தற்போதைய காலக் கட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி  முறையில் தங்கள் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக 25 – 35 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர், கண்டிப்பாக  சர்வதே சுற்றுலா அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டும் என அதிக செலவு செய்கின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, சுற்றுலாவுக்காக அதிக அளவு செலவு செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. சுற்றுலாவுக்காக ஆண்டு தோறும் அதிக தொகையை செலவு செய்து வந்தால், முதலீட்டுக்கு பணம் மிச்சமாகாது. சம்பளத்தில் சுமார் 3-5 சதவிகித தொகையைதான் சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும்.   5 பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு தான் தரமான கல்வி கிடைக்கிறது. அங்கு படித்தால்தான்  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள்.  பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒருவர் படிக்க ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயாவது கட்டணம் என்பது இருக்கும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாய் செலவாகும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய செலவு ஆகும். வருடத்திற்கு 45 – 50 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்  எனில், இதில் 3 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவது என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. இதுவே 10-12 லட்சம் ரூபாய் மட்டுமே வருடத்திற்கு சம்பாதிக்கும்  நடுத்தர குடும்பத்திற்கு, இது மிகப் பெரிய செலவு ஆகும். குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு.  அவற்றை தேர்வு செய்து, அங்கு  குழந்தைகளை படிக்க வைக்கலாம். ஒரு வேளை ஒரு சில வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அப்போது பெரிய பள்ளிக் கூடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். குழந்தைகளின் கல்வி செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 6 திருமணத்திற்கு அதிக செலவிடுதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்று. இதனால் பலரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதிலும் திருமணம் என்றாலே பிரைடல் மேக்கப் என்கிற மணமகள் அலங்காரம் என்பது மிகப் பெரிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு மட்டும் சில லட்சங்கள் செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதேபோல், வீடியோ, புகைப்படம் என லட்சக்கணக்கில் செய்யும் குடும்பங்கள் மிக அதிகம்.    சிறுக சிறுக சேமித்து வைத்த பெரும்பாலான சேமிப்புகளை இப்படிபட்ட ஆடம்பர செலவுகளிலேயே பலரும் பணத்தை கரைத்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதையும் தாண்டி கடன் வாங்கிச் செலவு செய்கின்றனர். கடன் வாங்கி திருமணச் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம். மாறாக இதுபோன்ற அனாவசிய செலவுகளை தவிர்த்து, அதை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம்.  7  கிரெடிட் கார்டு பயன்பாடு இன்றும் பலர் அடுத்த மாத சம்பளத்தில் தான் தற்போதைய மாத செலவுகளை செய்து கொண்டிருப்பர். சிலருக்கு மாத கடைசியில் கை கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான். இன்னும் சிலர்  ஓட்டல், கிளப், சினிமா, சுற்றுலா என ஜாலியாக கிரெடிட் கார்டு மூலம் இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள்.  அடுத்த மாதம் சம்பளத்தில் அதை கட்டிக் கொள்ளலாம் என கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது மிக மோசமான ஒரு பழக்கம். நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மாவிடம் ஏதேனும் அவசர தேவைக்காக பணம் கேட்டால், தாங்கள் சேமித்து வைத்த தொகையை பல இடங்களில் இருந்து எடுத்து வந்து தருவர்.  ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. மாறாக கடன் வாங்கியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலவு செய்கிறோம். ஆக இதுபோன்ற மோசமான பழக்கங்களை தவிர்த்தாலே நம்மிடம் பெரிய தொகை என்பது மிச்சமாகும். அதனை முதலீடு செய்யும் போது செல்வம் சேரும்.   பார்ட்டிகள் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சில தினங்களுக்கு அதிக செலவு செய்வதாகும்.  குழந்தையின்முதல் பிறந்த நாள். 10-வது திருமண நாள் என நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் பெரிய ஓட்டல் அல்லது பொழுதுபோக்கு விடுதிகளுக்கு கூட்டிச் சென்று லட்சக்கணக்கான ரூபாயை கண் மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். இது மிக மோசமான தவறுகளில் ஒன்று. குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக  1 வயதில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு பதில், அதே தொகையில் நகையாக, தங்க நாணயமாக வாங்கி வைக்கலாம்; நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.   இதன் மதிப்பு என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலே கூறப்பட்ட தவறுகளை தவிர்த்தாலே முதலீடு செய்ய அதிக தொகை கிடைக்கும். அது செல்வத்தை உருவாக்கவும் பெருக்கவும் செய்யும்.  Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்! Read More »

Is this Market Fall a Real Crisis?

Weekly Wealth Report Issue 179, Weekly Wealth Newsletter:  27th Jan 2025 -3rd Feb 2025 (Weekly Wealth Newsletter and a Private Circulation from Creating Wealth Company)                                                                                Curated by Mr. Sathish Kumar Founder – Creating Wealth Company Crorepathi Creator | Financial Consultant | Author | Speaker | Columnist | Youtuber Phone – 9841058689   Mail – creatingwealthadvisory@gmail.com     Web – www.sathishspeaks.com Is this Fall a Real Crisis? Download this NewsLetter as a PDF DOWNLOAD AS PDF You might feel that we are in the mid of devastating market Crash. The Indian stock markets have indeed declined over recent months, but by historical standards, this correction has been rather modest. The Sensex remains up 8.8 per cent over the past year, and looking at the five-year horizon. Yet the outcry on social media platforms would have you believe we’re facing a second global financial crisis. the mechanics of social media actively encourage and amplify negative sentiment. What should investors do in this environment? The answer is remarkably simple, though not necessarily easy to execute: maintain your regular investment schedule, focus on fundamentals and stay invested for long term. The current situation offers a valuable lesson in maintaining perspective for the fundamentally driven long-term equity investor. The most successful investors I’ve observed over the years share one crucial trait: they treat market corrections not as disasters but as natural features of the investment landscape. Just as the monsoon comes every year, markets will have their periods of decline. The key is to prepare for these periods not by trying to time them This means you can allocate additional funds to Mutual funds for long term Investing with diversifying appropriately. Most importantly, investing only those funds that won’t be needed for several years (At least 5 year). Happy Investing! Successful investment strategy requires regular reviewing and investor should buy funds at lower levels you can always reach us @ 78100 79946 for your portfolio review and rebalance Weekly Market Pulse Domestic equity markets fell for the third consecutive week as key benchmark indices BSE Sensex and Nifty 50 fell 0.56% and 0.48%, respectively. The fall was broad-based as the midcap segment and the small-cap segment both closed the week in red. Domestic equity markets fell amid a broad-based sell-off across the sectors on concerns over weak corporate earnings in Q3 FY25 and continued foreign fund outflows. Losses were extended following a mixed set of signals from the new U.S. President, as he delayed tariff plans on Chinese goods but threatened to impose tariffs on Canada and Mexico. On the BSE sectoral front, BSE Realty plunged 9.19% following a slowdown in housing sales BSE IT rose 2.32% supported by strong Q3 FY25 results by the large domestic information technology companies Mutual Fund Corner Invesco India Equity Savings Fund Growth potential of equities. The net long equity exposure may help reap benefit of long term growth potential of equity Arbitrage opportunity. Each arbitrage position in equity has a corresponding exposure in stock future which helps in reducing risk. Fixed Income exposure. The exposure to fixed income aims to reduce volatility and generates stable income. Bottom up and top down approach, combining growth and value buys to generate consistent outcome through all market conditions Taxation treatment Maintains eligibility for equity taxation. Equity exposure to be maintained in the range of 65-80% 20-35% allocation in debt and money market instruments To invest in SIP & in Mutual Funds Click the link and start your investments instantly ( You can also call us @ 78100 79946 ) Start your Investment Stock of the Week BSE CMP – 5556 Target – 6499 ( In 12 – 18 Month’s Time Frame) Bombay Stock Exchange (BSE Ltd) is an Indian Stock Exchange located at Dalal Street in Mumbai. The Co. facilitates a market for trading in equity, currencies, debt instruments, derivatives, and mutual funds. Strong Long Term Fundamental Strength with a 19.27% CAGR growth in Operating Profits With a growth in Net Profit of 223.27%, the company declared Outstanding results in Sep 24 High Institutional Holdings at 32.03% The company has declared positive results for the last 7 consecutive quarters Nil debt company OPERATING CF(Y) Highest at Rs 2,842.03 Cr NET SALES(Q) Highest at Rs 813.30 Cr PBDIT(Q) Highest at Rs 455.79 cr. For your Equity Recommendation, Pls call us 78100 79946 Mutual Fund Course All you want to learn about Mutual Funds Kickstart your Investment Journey of 2025 from here What You will Learn: 1. A-Z of Mutual Funds 2. Master the Art of SIP’s 3. Build Wealth Like a Pro 4. Recorded session contains 8 Chapters in Tamil Language 5. Lifetime Access Join Mutual Fund Course My First 1 Crore Club Still Wondering how a salaried person/professionals can make 1cr? Why do you have to join this Community? • Having money but still doesn’t know how & where to invest? • Selecting wrong Stocks? • Selecting wrong mutual funds? • Invested in all possible ways still money haven’t doubled? Join our First 1cr Club Webinar by payingjust 499/- Join the ONE CRORE Club Stock Simplified Course All you want to learn about Stock Market Kickstart your Investment Journey of 2025 from here Key Highlights: 1. Key entry and exit points of the stock market 2. 6-point filter to select a high-performing stock 3. Learn macro-economic trends in stock picking Join the Stock Market Simplified Course This Week Media Publications My Recent Article in Nanayam Vikatan – Will Copy and Paste Investing produce better returns for Investors? Click Here My Book Publications Middle Class to Million Dollar Book Buy Now To Buy my Untold Wealth Secret Book Buy Now Top 10 Mutual Funds to Invest in 2025 Buy Now Download this NewsLetter as a PDF by clicking the below button DOWNLOAD NOW Facebook Youtube

Is this Market Fall a Real Crisis? Read More »

Transform your mindset and unlock your potential for success!

கோடிகளில் பணம் சம்பாதிக்க 6 முக்கிய  மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அது ஏழையாக இருந்தாலும் சரி,கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறோம். எனினும்பணக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. ஆனால் அவர்கள் அதை முன்கூட்டியே திட்டமிட்டுஅதை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பியதை அடைய சுதந்திரமாக செயல்படுகின்றனர். அந்த மனநிலையை வளர்த்துக் கொள்வதால் தான், அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஆக நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில்,   ஆறு குறிப்பிடத்தக்க தகுதிகளை உங்களுக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன நிலை சிறப்பானதாக இருந்தால், அதுவே உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1 வெற்றிதான் முதல் இலக்கு நாம் எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது இரு முறை நிகழும். முதல் வெற்றி மனதளவில் நடக்கும், இரண்டாவது வெற்றி நடைமுறையில் நடக்கும்.   பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொழிலை செய்வதில்லை. மாறாக அதில் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  செயல்படுகிறார்கள். உதாரணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும், விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ வேண்டும் என நினைத்தால்,இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானி ஆயுள் முழுக்க அவர் சம்பாதித்த சொத்துகளைசெலவு செய்தால் கூட, அவரால் அவரின் சொத்துகளை செலவழிக்க முடியாது. ஆனாலும் கூட இன்று வரையில்புதிய புதிய வணிகங்களை தொடங்குகிறார். முதலீடு செய்கிறார் எனில், ஏன்? ஏனெனில் அவர்வெற்றி என்ற இலக்கை அடைய துடிக்கிறார். அந்த மனநிலையில் தான் இருக்கிறார். அதுவே அவரின் பணம் மேலும் வளர உதவிகரமாக இருக்கிறது. ஆக இந்த வெற்றி மனநிலையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணத்தின் பின்னால் ஓடாமல், வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அதுவே நம் இலக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.  2  பிறரை கவர பந்தா வேண்டாம் இரண்டாவது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நிகர சொத்து மதிப்பு என்கிற  நெட்வொர்த் ஆகும்.  ஒரு பணக்காரருக்கும் (Rich Man), செல்வந்தருக்கும் (Wealthy man) இடையில் உள்ள விஷயங்களை கவனித்து பாருங்கள், ஒரு பணக்காரர் மிக ஆடம்பரமாக கையில் தங்க கடிகாரம், தங்க ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் கார் என வைத்திருப்பார். ஆனால் அதை சரியாக பராமரிப்பதற்கு செலவிட வேண்டிய தொகை என்பது, எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பென்ஸ் காரின் இன்ஷூரன்ஸ், மற்ற பராமரிப்பு செலவுகள் என்பது மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மொத்த சொத்தின் மதிப்பை கணக்கிட்டால், செல்வந்தரை காட்டிலும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் சமுதாயத்தில் தங்களை முன்னிலைப் படுத்தி கொள்ள இத்தனையும் செய்வார்கள். இன்னும் இதை தெளிவாக நடைமுறை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பந்தா பேர்வழிகளாக இருப்பர். ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள் என்றால் அவ்வளவு தான். அதோடுஅவர்களின் சொத்து மதிப்பு தரைமட்டத்திற்கு சென்றுவிடும். அதிலிருந்து அவர்களால் மீள முடியாது. இதே ஒரு செல்வந்தரை பார்த்தால் மிக எளிமையாக இருப்பார். அவரும் பென்ஸ் கார் வைத்திருப்பார். ஆனாலும் அவர் அதை பராமரிப்பது எளிது. அவரின் வணிக தேவைக்காக அதை வாங்கியிருப்பார்.அவரின் சொத்து மதிப்பும் பணக்காரர்களை காட்டிலும் அதிகம் இருக்கும். அவர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தங்கள் நெட்வொர்த்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆக இதெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.  3. பணம் இருப்பதை வெளியில் காட்டாதீர்கள்..! பணம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுவாக, நடுத்தர  மக்கள் பலரும் தங்களை எப்போதும் பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதற்காக பணக்காரர்கள் பயன்படுத்துவதை போல் விலை உயர்ந்த கார்,  ஸ்மார்ட் போன் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி குவிப்பர்.  தங்களிடமும் பணம் இருக்கிறது என்பதை இதன் மூலம் காட்டிக் கொள்வர். பணக்காரர்கள் போல ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். அதற்காக கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பது இன்னொரு துரதிர்ஷ்டவசமான விஷயம்.  இது மிகப்பெரிய தவறு ஆகும். அதை  ஒருபோதும் நீங்கள்  செய்யாதீர்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.  ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளீர்களா? வங்கியில் பணம் வைத்திருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறீர்களா? விலை உயர்ந்த கார் வாங்கியிருக்கிறீர்களா?    அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.  ஆனால் மற்றவர்கள் இடத்தில் பகிராதீர்கள். அதை விடுத்து பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள எதையும் செய்யாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழங்குங்கள். அதை விடுத்து கடனை வாங்கி செலவு செய்து அஸ்தஸ்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், அது உங்களை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும். இது உங்களை எப்போதும் வளர விடாது. ஆக இந்த மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். 4 நீண்ட கால அடிப்படையில் யோசித்தல்..! பலரும் நினைப்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளை வாங்கிக் கொண்டு, அது ஒரே வருடத்தில் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க வேண்டும்எ ன்று நினைக்கிறார்கள். 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 10% வருமானம் கிடைத்து, 11 லட்சம் ரூபாயாக எதிர்பார்த்தால் தவறில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கும்? என்று எதிர்பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு. 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 15% வருமானம் கிடைக்கிறது எனில், 50 வருடத்தில் உங்கள் முதலீடு 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்திருக்கும். ஆனால் இப்படி யாரேனும் நீண்டகால அடிப்படையில் யோசிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்ட கால அடிப்படையில் உங்கள் இலக்குகளை உயர்ந்ததாக வைத்திருங்கள். அது உங்கள் பணம் வளர உதவிகரமாக இருக்கும். 40 வயதான ஒருவர் இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 50 வருடம் காத்திருந்தால், 90 வயதில் 100 கோடி ரூபாய் கிடைத்து என்ன பலன் என்ற கேள்வியும் எழலாம்.   ஆக இந்த வயதில் உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். 50 ஆண்டுகள் என்பதை விடுத்து, 10, 15 ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் என்பது மிக மிக அவசியமான ஒன்று. 5  ரிஸ்கை கணக்கிடுதல் பலரும் பங்குச் சந்தை என்றால் அது சூதாட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் முதலீடு ஆகும். அவற்றை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பலரும் விலகியே இருக்கிறார்கள். என்னால் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என கூறுவர். ஆனால் இது  மிக தவறானது. மாறாக வணிகமோ அல்லது முதலீடோ அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு  அதில் ஈடுபடலாம்.. இது வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும்.அதை விடுத்து எந்த முயற்சியும் செய்யாமல் வணிகம் என்றாலே நஷ்டம். பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற மன நிலை இருந்தால், அதில் வெற்றி பெறுவதும் கடினம். இதுவே  செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் எனலாம். ஆக பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது புத்திசாலிதனமான ஒன்றாக இருக்கும்.  6 தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்..! செல்வந்தர் ஆக தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். அது உங்களை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும். கற்றுக் கொள்வதோடு விட்டுவிடாமல் அதை செயலிலும் சரியாக செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பலரும் பலவிதமான வணிக திட்டங்களை கூறுவார்கள். இதை செய்தால் அவ்வளவு லாபம் கிடைக்கும். இது இவ்வளவு லாபம் கிடைக்கும். இது சூப்பரான பிசினஸ் என கூறுவார்கள்.இதை அவரிடத்தில் கேட்டு செய்த நண்பர்கள் கூட அதை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆனால் வணிகம் பற்றி பேசியவர் பேசிக் கொண்டுதான் இருப்பார். இந்த மன நிலையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். கற்றுக் கொண்டதை செயல்படுத்த தொடங்குங்கள். இந்த ஆறு மனநிலைகளை ஒருவர் கொண்டிருந்தாலே, அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். மேலும், பணத்தை பெருக்க கற்றுக் கொண்டுள்ளார் எனலாம். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கோடிகளில் பணம் சம்பாதிக்க 6 முக்கிய  மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா? Read More »

5 simple ways to multiply wealth easily – practical financial growth strategies.

செல்வத்தை பெருக்க 5 சுலப வழி முறைகள்…!

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/ ஒருவர் செல்வந்தர் ஆவது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.  முக்கியமாக 5  வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் ஒருவர் சுலபமாக செல்வந்தர் ஆகிவிட முடியும்.  அந்த வழிமுறைகளை விரிவாக பார்ப்போம். 1 சொத்தின் மதிப்பு வளர்ச்சி..! ஒருவரிடம் எந்த வகையான சொத்துகள் (Assets) இருக்கின்றன? அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது மிக முக்கியம்.  ஒருவரிடம் ஒரு சொத்து இருக்கிறது என்றால் அதன் மதிப்பு எவ்வளவு என அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  பார்க்காத பயிர் பாழ் என்பது போல் கவனிக்காத சொத்தும் பாழ்தான். விவரம் தெரிந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் மாத கடைசித் தேதிகளில் உற்சாகமாக இருப்பார்கள். காரணம்,  அப்போது அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு என்ன என்பது பற்றிய கணக்கு போட்டு பார்த்திருப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் தங்கம், பணம், சேமிப்புக் கணக்கில் இருக்கக்கூடிய இருப்பு, வைப்பு நிதி இருப்பு, பி.எஃப், பி.பி.எஃப்.  இருப்புத் தொகை, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவற்றின் எல்லாவற்றின்  இன்றைய மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அவர்கள் பார்த்திருப்பார்கள்.  ரியல் எஸ்டேட்டில் மட்டும் சரியாக மதிப்பு போட முடியாது. ஆனால், மற்ற முதலீடுகளின் மதிப்பை ஒரு முதலீட்டாளர் மதிப்பிட முடியும். சென்ற மாதத்துக்கும் இந்த மாதத்துக்கும் செல்வத்தின் பண மதிப்பு எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். கூடவே வங்கி சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, பி.பி.எஃப், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் இப்படி எல்லாவற்றிலும் எவ்வளவு வளர்ச்சி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மாதந்தோறும் பார்க்க முடியவில்லை என்றாலும் மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டுக்கு ஒரு முறையாவது முதலீடுகளின் மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை கவனித்து வர வேண்டும். 2 வளரும் சொத்தை கண்டு பிடியுங்கள்..! மேலே கூறப்பட்டபடி அலசி ஆராய்ந்தால், மிக முக்கியமாக, ஏழு வருடங்களுக்கு முன் எவ்வளவு இருந்தது, ஐந்து வருடங்களுக்கு முன் எவ்வளவு மதிப்பு,  இப்படி வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  கடந்த ஐந்து வருடத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது, தங்கம் எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது என  பார்க்க வேண்டும். இதேபோல், பி.பி.எஃப்., வைப்பு நிதி உள்ளிட்டவைகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.   அப்போதுதான் எந்தச் சொத்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை அறிந்து அதில் முதலீட்டை அதிகரித்து அதிக லாபம் ஈட்ட முடியும்.இப்போது, ஏதாவது ஒரு வகையில் பணம் வருகிறது என்றால் அதை, எந்தத்  திட்டத்தில் போட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற முடிவை சுலபமாக எடுக்க முடியும்.முதலீட்டில் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். அதை சரியாக கணக்கீடு செய்தால், மேற்கொண்டு சரியான திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். 3 நீண்ட கால முதலீடு..! ஒரே இரவில் யாரும் பணக்காரர் ஆக முடியாது. ஒருவர் கடன் வாங்காமல் மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளை சுலபமாக செய்ய வேண்டும் என்றால் அவரின் முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைப்பது அவசியமாகும்.  நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரும் ஆண்டுக்கு சராசரியாக போது 12-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.  பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பது ஒரு டைனமிக் முதலீடாகும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது, லாபத்தை வெளியே எடுக்க வேண்டும்.  பங்குச் சந்தை கீழே இறங்கும்போது முதலீடு செய்ய வேண்டும்.  அடிப்படையில் வலுவான நல்ல தரமான பங்குகளில் இப்படி செய்யும் போது நீண்ட காலத்தில் நல்ல வரும் கிடைக்கும். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் லார்ஜ் கேப் பங்குகள் எனப்படும் மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். பங்குச் சந்தையில்  அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டு வருவார். அங்கு இருக்கும் நிதி மேலாளர் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சரியாக கணித்து முதலீட்டை மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவார். 4 சீரான முதலீட்டு முறை..! பங்குச் சந்தையின் செயல்பாட்டை சாதாரண சிறு முதலீட்டாளர்களால் சரியாக கணிப்பது என்பது மிகக் கடினமாகும். அந்த வகையில் பங்கு மற்றும் ஃபண்ட்களில் சீரான முதலீட்டு முறை என்கிற எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை கணிசமாக குறைக்க முடியும். மேலும் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தையும் பெற முடியும்.மொத்தப் பணம் இருந்தால், அதனை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் என்கிற எஸ்டிபி முறையில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு முதலீட்டை சீரான இடைவெளியில் குறிப்பிட்டக் காலத்துக்கு மாற்றுவது நல்லது. இப்படி செய்யும் போது பங்குச் சந்தையின் ரிஸ்க் வெகுவாக குறையும். 5 அஸெட் அலோகேஷன்…! ஒருவர் அதுவும் சிறு முதலீட்டாளர் எப்போது, எந்தச் சொத்து பிரிவு அதிக வருமானத்தை தரும் என்பதை கண்டுபிடிப்பது   கஷ்டமான காரியம் ஆகும்.   ஒருவர் அவரின் நிதி இலக்கு, ரிஸ்க் எடுக்கும் காலம், முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில், கிரிப்டோ, என்.எஃப்.டி., ஷேர் டிரேடிங் உள்ளிட்டவைகளை சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லது. இவை மிக அதிக ரிஸ்க்கானவை மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டமானவையாகும்.  எது எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து  முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல வளர்ச்சியை பெற முடியும். அனுமதி இல்லாத சிட் ஃபண்ட். என்பது யாரோ ஒருவர் நடத்துகிறார். அவர் திடீரென்று காணாமல் போய்விடுவார். அல்லது அவரிடம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதனால், பிரச்னை நமக்குத்தான். அதனால், பதிவு செய்யாத சிட் ஃபண்ட்களில் ஒரு போதும் முதலீடு செய்யாதீர்கள். இறுதியாக, பண வளர்ச்சிக்கு நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக பொறுமை மிக முக்கியம்.  பங்குச் சந்தையின் உண்மை நிலையை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  உங்கள் முதலீட்டுக் கலவையில் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் இல்லை என்றால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்காது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப முதலீடுகளை பிரித்து முதலீடு செய்து வருவது அவசியமாகும். பாக்ஸ் இந்திய நிறுவனப் பங்குகளே போதும்..!தற்போதைய நிலையில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. வெளிநாடுகளை விட அடுத்த ஏழு, எட்டு வருடத்திற்கு இந்தியாவில் நல்ல வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

செல்வத்தை பெருக்க 5 சுலப வழி முறைகள்…! Read More »

3 golden rules for multiplying wealth effortlessly – practical and proven financial tips.

செல்வத்தைப் பெருக்க உதவும் 3 தங்க விதிகள்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ கையிலிருக்கும் பணத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு மூன்று முக்கியமான தங்க விதிமுறைகளைப் பின்பற்றினால் போதும், நீண்டகாலத்தில் பெரிய கார்பஸ் தொகையை விரைவாகவும், எளிமையாகவும், சுலபமாகவும் உங்களால் சேர்க்க முடியும்.  அந்த மூன்று தங்க விதிகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.  1. முதலீட்டுத் தொகை மிக முக்கியம்..! பெரிய தொகுப்பு தொகையை உருவாக்கும் நிதி இலக்கைக் கொண்டிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒருவருடைய வருமான ஆதாரத்தின்படி பார்க்கும்போது அவரால் மாதம் ரூ.25,000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி  முறை மூலம் முதலீடு செய்ய முடியும். இருந்தாலும் அவர் வேண்டுமென்றே மாதம் ரூ.15,000 மட்டும்தான் முதலீடு செய்து வருவார். அவர்களுக்கு அந்த ரூ.10,000 இடைவெளி என்பது முதலீட்டில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பார். அவர் அறிந்து கொள்ளத் தவறிய தாக்கம் என்ன என்பதை நீங்கள் பாருங்கள். மாதம் ரூ.15,000 என்ற வகையில் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள். அது 15 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது எனில், 20 வருட முடிவில் 2.3 கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக சேரும்.  ஆனால் 15,000 ரூபாயுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் கூடுதலாக நீங்கள் சேர்த்து முதலீடு செய்து வந்தீர்கள் எனில் உங்களுடைய முதலீட்டின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத  அளவுக்கு உயர்ந்திருக்கும். மாதம் ரூ.15,000 மட்டும் எஸ்.ஐ.பியைத் தொடர்ந்து வந்தால் ரூ.2.3 கோடி கிடைக்கும் நிலையில் அதனை அதனுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகித தொகையை கூடுதலாகச் சேர்த்து  முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ.4.17 கோடி தொகுப்பு தொகையாகக் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை  10 சதவிகிதம் படிப்படியாக அதிகரிப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமான காரியம்தான். ஏனெனில்  மாத சம்பளமாக இருந்தாலும் சரி, தொழில் செய்து சம்பாதிப்பவராக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருமானம் குறைந்தது 10-15% ஏன் 20% கூட  செய்யுமே தவிர குறையாது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் முதலீட்டுத் தொகையைக் கூட்டி வந்தால்  தொகுப்பு தொகை அப்படியே இரண்டு மடங்காக வளரும். உதாரணத்துக்கு ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.50,000 என்றும் அவர்  இப்போது அவர் மாதம் 15,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார் என வைத்துகொள்வோம். இவருக்கு அடுத்த ஆண்டு சம்பளம் 10% அதிகரிக்கிறது என்றால் அவரின் சம்பளம் ரூ.50,000-லிருந்து ரூ.55,000 ஆக அதிகரிக்கும். அதேநேரத்தில் அவரின் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையான ரூ.15,000-ஐ 10% சதவிகிதம் அதிகரித்தால் அது ரூ. 16,500 ஆக அதிகரிக்கும். சம்பளம் ரூ.5,000 அதிகரித்துள்ள எஸ்.ஐ.பி தொகையை ரூ.1,500 அதிகரிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை தானே? 2. முதலீட்டுக் காலம்..!  செல்வத்தைப் பெருக்குவதில் எவ்வளவு காலத்துக்கு நாம் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம் ஆகும். உதாரணமாக 15:15:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 என்ற வகையில்,  ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகித வருமான வளர்ச்சி தரும் முதலீட்டுத் திட்டத்தில்  15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அப்போது 15 ஆண்டுகள் முடிவில் உங்களுடைய  தொகுப்பு நிதி ரூ.1 கோடியாக இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானோருக்கு ரூ.1 கோடி என்பது மிகவும் எளிதாகச் சேர்க்கக்கூடிய ஒரு தொகைதான். ஆனால், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் இந்த ரூ.1 கோடி  தொகுப்பு நிதியை 8 மடங்காகப் பெருக்க முடியும். எப்படி எனில் முதலீட்டுக் காலத்தை அதிகரிப்பது மூலம் இது சாத்தியமாகும். 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 30 ஆண்டுகளாக முதலீட்டுக் காலத்தை அதிகரித்தால் உங்களுடைய தொகுப்பு தொகை ரூ.8  கோடியாக  அதிகரித்திருக்கும். நீங்கள் முதலீடு செய்யப் போவது  15 ஆண்டுகள்தான் ஆனால் முதலீட்டை 30 ஆண்டுகள் வரை எடுக்காமல் வைத்திருந்தால் கூட்டு வட்டி வளர்ச்சி சக்தியினால் உங்களுடைய  தொகுப்பு தொகை 8 மடங்கு உயர்கிறது. நினைத்து பாருங்கள் ரூ.1 கோடி எங்கே இருக்கிறது?, ரூ.8 கோடி எங்கே இருக்கிறது?. இதுதான்  நீண்ட கால முதலீடு மற்றும் கூட்டு வளர்ச்சி ஏற்படுத்துகிற மேஜிக் தாக்கம் ஆகும். எனவே முதலீட்டை முடிந்த வரை நீண்ட காலத்துக்கு தொடர்ந்தால் பல மடங்காக செல்வத்தைப் பெருக்க முடியும்.  3.  வருமானம் எவ்வளவு?  நீங்கள் 15:12:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள். இங்கே முதலீட்டுக்கான  வருமானம் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என்பதற்கு பதில் 12 சதவிகிதம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு 15 ஆண்டு முடிவில் கிடைக்கக் கூடிய  கார்பஸ் ரூ.76 லட்சமாக மட்டுமே இருக்கும். வருமானத்தில் குறையும் 3 சதவிகிதம், கார்பஸில் 24 சதவிகிதத்தைக் குறைத்துவிடுகிறது. எனவே முதலீடு என்பது மிகவும் எளிமையான விஷயம்தான். ஆனாலும் அதை அவ்வப்போது மறு ஆய்வு செய்து நிர்வகிக்க வேண்டியது அவசியம். உங்களால் மறு ஆய்வு செய்ய முடியாதபட்சத்தில் நிதி ஆலோசகர்களின் உதவியை நாடலாம். உங்களுடைய முதலீட்டில் வருமானம் குறையும்போது அதற்கு என்ன செய்யலாம், முதலீட்டில் என்ன மாற்றங்களைச் செய்யலாம், எதில் கூடுதலாக முதலீடு செய்து வருமான இழப்பை ஈடு செய்யலாம் என்று நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுவார்கள்.  இந்த மூன்று விதிமுறைகளையும் உங்களுடைய முதலீட்டில் மறக்காமல் பின்பற்றி வந்தால் நீண்டகாலத்தில் பெரிய தொகுப்பு நிதியை சுலபமாக உங்களால் உருவாக்க முடியும். ஆல் த பெஸ்ட்..! Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

செல்வத்தைப் பெருக்க உதவும் 3 தங்க விதிகள்! Read More »

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்..!

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாக ஒரு திட்டம். மாதம் ரூ.5,000 என்றால் ஆண்டுக்கு ரூ.60,000. இது 60 சதவிகித வருமானம் ஆகும். இதனை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். இப்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஆண்டுக்கு 6 சதவிகிதம்தான் வருமானம் கொடுக்கிறது. தபால் அலுவலக சேமிப்பு திட்டம் என்றால் இதனை விட சற்று கூடுதல் வட்டி கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் சுமார் 8%, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் 12-14 சதவிகிதம்தான் வருமானம் கிடைக்கும். நிறுவனப் பங்கு முதலீடு என்றால் 15-20 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிறுவனப் பங்குகளில் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடவே அதிக ரிஸ்க் இருக்கிறது. பான்ஸி திட்டம்..! ஆண்டுக்கு 60 சதவிகிதம் வருமானம் தரும் திட்டத்தை பான்ஸி திட்டம் (Ponzi Scheme) என்பார்கள். இந்தத் திட்டத்தில் மிக அதிகப்படியான வருமானத்தை தருவதாக உறுதி அளிப்பார்கள். எனது நண்பர் ஒருவர் இது போன்ற திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்; அவருக்கு மாதம் ரூ.50,000 அவரின் வங்கிக் கணக்கு வந்துகொண்டிருக்கிறது என்கிறார். சதுரங்க வேட்டை என்று ஒரு தமிழ் சினிமாவில் ஒரு வசனம் வரும். ‘ஒரு வரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரின் ஆசையை தூண்ட வேண்டும்.’ என்பது அந்த வசனம் ஆகும். இந்த பான்ஸி திட்டத்தில் ஒருவரை முதலீடு செய்ய வைக்க, அவருக்கு அபரிமிதமான வருமானம் தருவதாக சொல்லி பேராசையை தூண்டுவார்கள். இப்படி ஆண்டுக்கு 60% வருமானம் தருவதாக சொல்லும் முதலீட்டுத் திட்டம் நிச்சயம் மோசடி திட்டமாக தான் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை வைத்திருப்பவர்கள், இந்தத் திட்டத்தில் ரிஸ்கே கிடையாது. மாதா மாதம் உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேர்ந்துவிடும் என உறுதி அளிப்பார்கள். சாத்தியமில்லாத, தெளிவு இல்லாத திட்டம்..! ‘உங்களால் எப்படி ஆண்டுக்கு 60 சதவிகித வருமானம் கொடுக்க முடியும் என்றால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தெளிவு எதுவும் இல்லாத ஒரு திட்டத்தை சொல்வார்கள். உதாரணத்துக்கு, புதிதாக வந்திருக்கும் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்திருக்கிறோம். இது 100 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தான் உங்களுக்கு 60 சதவிகித வருமானம் கொடுக்கிறோம் என்பார்கள். அல்லது ஃப்யூச்சர்ஸ்-ல் முதலீடு செய்கிறோம் அல்லது ஆப்ஷன்ஸ்-ல் முதலீடு செய்கிறோம். எங்களுக்கு 200 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது என்பார்கள்.  கிரிப்டோ கரன்ஸி, ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் மாதா மாதம் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எல்லாம் நடுத்தர வருமானப் பிரிவினர், பணி ஓய்வுப் பெற்று கையில் மொத்தப் பணம் வைத்திருப்பவர்கள்தான். இவற்றை எல்லாம் மிக மோசமான விஷயம் என்னவென்றால் இது போன்ற திட்டங்களில் கடன் வாங்கி முதலீடு செய்வது மற்றும் சொத்தை விற்று பணம் போடுவதாகும். தனியார் நிதி நிறுவனங்களில் 18%, 20%-க்கு எல்லாம் கடன் வாங்கி, 60 சதவிகித வருமானம் கிடைக்கிறதே என பேராசைப்பட்டு முதலீடு செய்கிறார்கள். பிரச்சனைக்கு யாரிடம் முறையிடுவது? வங்கியில் முதலீடு செய்யும் போது பிரச்னை ஏதும் என்றால் ரிசர்வ் வங்கி தீர்த்து வைக்கும். மேலும் போடும் முதலீட்டுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் உத்தரவாதம் இருக்கிறது.  பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிக்கல் என்றால் செபி என்கிற அமைப்பிடம் முறையிட முடியும். அதேநேரத்தில், 60 சதவிகித வருமானம் தருகிறோம் என்று சொல்கிற பான்ஸி திட்டத்தில் பிரச்னை என்றால் யாரிடமும் புகார் செய்ய முடியாது. எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்திலும் 12 சதவிகிதத்துக்கு மேல் உறுதியான வருமானம் தருகிறோம் என்று சொன்னால் மிகவும் உஷாராக இருப்பது அவசியமாகும். அதுவும் 50% வருமானம், 60% வருமானம் என்றால் இரட்டை உஷாராக இருப்பது நல்லது. இது போன்ற திட்டங்களில் ஒருவரிடம் வாங்கும் பணத்தைதான் மற்றவர்களுக்கு வட்டியாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்டத் தொகை மொத்தமாக சேர்ந்த உடன் (ரூ.100 கோடி, ரூ.1000 கோடி) தலைமறைவாகி விடுவார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் இது போன்ற திட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். முதலீட்டாளர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்.     Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்..! Read More »

Understand why investing in small and mid-cap funds now can boost your portfolio growth.

Why to invest in Small and Mid cap Funds now?

In the last 1 year Mid and small cap have seen a sharp correction and pull back. Does the correction in the broader market provide an opportunity to invest in mid- and small-cap funds? That’s a question on everyone’s mind right now. But with the economy slowing down and growth projections being lowered, is it too early to start looking at small caps?  In terms of valuation, a lot of the froth has gone away in small caps as compared to large caps,  “While everything is not cheap, it’s starting to look attractive.” Investors needs to have a long-term investment horizon, typically more than five years, when investing in small cap funds, “Before making any allocation to small caps, one needs to understand that this is an inherently volatile asset class, and based on their risk-taking ability and goal, invest in these funds.” Take a look at this statistics to understand the returns when the markets hit low on Mid and Small cap space. Always, i advise investors to have very long-term horizon for small caps because inherently it is a very volatile asset class and it takes time for small cap companies to scale up, grow and show great results and create wealth for investors.  You can manage this risk of further slowdown by deferring your investments through SIP, STPs or doing it in an instalment manner. They are putting some milestone and investors have to have five years-plus time horizon to make a decent return in small cap space. It is not a two-three year story. Disclaimer. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully or colsult your Wealth Consultant. Helping people to Increase their Networth and Wealth. Sathish Kumar Equity Fund Manager | Wealth Consultant | Author Email: creatingwealthadvisory@gmail.com Whatsapp / Call –  +919841058689 http://sathishspeaks.com/ http://www.assetplus.in/partner/sathishkumar https://www.flipkart.com/untold-wealth-secrets/p/itmdf470e16874ad?pid=9789389080223&cmpid=product.share.pp *Why to invest in Small and Mid cap Funds now?* Here you will understand http://sathishspeaks.com/why-to-invest-in-small-and-mid-cap-funds-now/ *Sathish Kumar* *Equity Fund Manager | Wealth Consultant | Author* Whatsapp / Call –  +919841058689 https://www.flipkart.com/untold-wealth-secrets/p/itmdf470e16874ad?pid=9789389080223&cmpid=product.share.pp Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money Kickstart your Investment Journey of 2025 from here🤝🏻Check out Our New Course “Welcome to the World of Mutual Funds”🙌You will Learn: Actual Cost 4999/- and get it for 2499/-For First 100 Registrations as Launch Offer Buy it at 1999/- Use Code “SATHISHSPEAKS2025” Hurry Up Limited Period Offer Only!!!! Click the below link to enroll to the course and Transform your finances 👇https://webinar.sathishspeaks.com/

Why to invest in Small and Mid cap Funds now? Read More »

Markets and Returns are like a Mirror!

Weekly Wealth Report Issue 178, Weekly Wealth Newsletter:  20th Jan 2024 – 27th Jan 2025 (Weekly Wealth Newsletter and a Private Circulation from Creating Wealth Company)                                                                                Curated by Mr. Sathish Kumar Founder – Creating Wealth Company Crorepathi Creator | Financial Consultant | Author | Speaker | Columnist | Youtuber Phone – 9841058689   Mail – creatingwealthadvisory@gmail.com     Web – www.sathishspeaks.com You Mirror your Returns Download this NewsLetter as a PDF DOWNLOAD AS PDF I recently received a call from my friend, who after much convincing had started investing his money through SIP’s around two years back. He sounded panicky when we spoke. “The markets are falling, Sathish!” he said. “Yes, that is normal as stock market is volatile,” I replied. “Like you had advised, I have continued my mutual fund investments every month without fail, but I am worried now. Should I stop my monthly investment, or sell them?” “When do you need the money you’ve invested?” I asked. “I don’t need it now,” he replied, “But I am worried that the markets may fall even further. And I don’t want to see my savings lose more value.” I said, “If you want to take my advice, and if you don’t need the money now, do nothing.” I tried to tell him that markets continuously test our patience, but more so at these moments when they are falling. But he wasn’t ready to hear it. A day later, he messaged me: “I sold half of my investments, and have stopped my SIPs for now. Will start when things are clearer.” “Stock Market will never be” but you do what you think is good for you. Markets are a mirror, and a mirror doesn’t lie, or flatter, or care about your feelings. They reflect exactly what you bring to them—your patience or your panic, your discipline or your desperation. Like they didn’t cause my friend’s panic but only revealed it. Markets are like that. They show you what’s inside, whether you’re ready to see it or not. When the seas are calm, you can convince yourself you’re patient and level-headed. But when the storm hits—and there’s no storm yet in the markets—the truth comes out. As Warren Buffett so famously said, “Only when the tide goes out do you learn who has been swimming naked.” Markets reward patience, discipline, and the ability to stay still when every instinct is screaming, “Do something!” The great irony is that doing nothing is often the hardest thing to do, even though it’s usually the right move. Now, the patience I’m talking about is not passive. It’s not about sitting around and hoping things work out. It’s about staying grounded in what you know to be true, which includes the quality of your investments. Successful investment strategy requires regular reviewing and investor should buy funds at lower levels you can always reach us @ 78100 79946 for your portfolio review and rebalance Weekly Market Pulse IMF said for India the economic growth is projected to be solid at 6.5% in 2025 and 2026 Indian equity benchmarks closed lower on Friday, dragged down by declines in heavyweight IT and banking stocks owing to a mixed corporate earnings season. Losses widened due to the weakening rupee and heavy selling by foreign institutional investors. India’s fiscal deficit is projected to shrink due to rising tax revenues, highlighting an improved fiscal position, according to a World Bank report. As per the latest RBI Bulletin release India’s economic growth is poised to rebound as domestic demand regains strength, though the stickiness in food inflation warrants careful monitoring. Mutual Fund Corner Edelweiss Balanced Advantage Fund The fund dynamically changes asset allocation across equity, debt, cash and derivatives (including hedges), based on valuation cycles The Fund manager will increase the exposure to equity when market valuations are attractive and will prune the equity exposure by increasing cash or debt exposure and/or through hedging when equity markets get expensive or experience volatility. Allocation to equities and debt & money market instruments can be in the range of 0% – 100%. Asset allocation is determined based on proprietary model combining valuation parameters like P/E & P/B along with the yield gap to determine net equity allocation. The model may use qualitative overlay of fund management team from time to time to arrive at final equity allocation To invest in SIP & in Mutual Funds Click the link and start your investments instantly ( You can also call us @ 78100 79946 ) Start your Investment Stock of the Week BSE CMP – 5998 Target – 6499 ( In 12 – 18 Month’s Time Frame) Bombay Stock Exchange (BSE Ltd) is an Indian Stock Exchange located at Dalal Street in Mumbai. The Co. facilitates a market for trading in equity, currencies, debt instruments, derivatives, and mutual funds. Strong Long Term Fundamental Strength with a 19.27% CAGR growth in Operating Profits With a growth in Net Profit of 223.27%, the company declared Outstanding results in Sep 24 High Institutional Holdings at 32.03% The company has declared positive results for the last 7 consecutive quarters Nil debt company OPERATING CF(Y) Highest at Rs 2,842.03 Cr NET SALES(Q) Highest at Rs 813.30 Cr PBDIT(Q) Highest at Rs 455.79 cr. For your Equity Recommendation, Pls call us 78100 79946 Mutual Fund Course All you want to learn about Mutual Funds Kickstart your Investment Journey of 2025 from here What You will Learn: 1. A-Z of Mutual Funds 2. Master the Art of SIP’s 3. Build Wealth Like a Pro 4. Recorded session contains 8 Chapters in Tamil Language 5. Lifetime Access Join Mutual Fund Course My First 1 Crore Club Still Wondering how a salaried person/professionals can make 1cr? Why do you have to join this Community? • Having money but

Markets and Returns are like a Mirror! Read More »

Summary of 100 to 1 in the Stock Market - Strategies for identifying high-growth stocks and achieving remarkable returns.

Summary of Popular Book – 100 to 1 in Stock Market 

This book has been written by Thomas Phelps ( 1902 – 1992 ) a renowned and successful investor, Columnist, Analyst and Financial Advisor. In this book, he helps the investors to increase their wealth through Buy and Hold Strategy. Buying stocks and holding it for more than 10 years as investments. He emphasizes these 2 Golden Rules with lots of case studies in his book. Successful Investor’s pattern He insists that the investor should have the “vision to see them, courage to buy them and patience to hold them” and Patience is the rarest of the three. Successful investors hold stock for more than 10 years ( Average of 20 Years ) to get the stock as 100 Baggers. They identify great company stocks and hold it for more than 10 years ( Typically 20 – 30 years ) Now, the popular question is how to identify these companies – He provides a case study where most of the investors buys great company stocks and they knew about the company can be a Multi Bagger Stock, but they sell them when it gives 20% – 30% profit. Investors don’t have the tenacity to hold the stocks like the way the owner of the company holds it. ( Mr.Buffet also advocates the same principle )  Most Important Rule in Stock Market Bear Market smoke gets into the eyes of the investor and make them blind on the buying opportunities.  When he is successful in timing the market, the greater temptation to rely on spotting the best timing to enter and thus he misses the biggest buying opportunities in buying right and holding on.  He concludes the book with a story of Arabs – An Angel woke up 4 Arab in the middle of the night and grant them a wish – 1st Arab asks for a donkey and he gets it. 2nd Arab wishes for 10 donkeys and he also gets it. 3rd Arab asks for a kingdom and he becomes a King. 4th Arab wishes to become Allah himself, but he gets nothing. He mentions that those who ask too little of life gets little. Those who as much gets much. Those who are greedy and wishes for too much, they get nothing.  This book is a reiteration of beautiful concept called – Buy Right and Sit Tight. Buy quality company for reasonable price and hold on for a longer term.  Also it is the investor responsibility to check whether the company makes good progress or not in every 3 Months. Without regular reviewing of your stock portfolio, you will never realise full growth potential of stocks and portfolio. For Multibagger & Stock Market Portfolio Recommendations pls reach out me @ 9841058689 One call can change your finances forever To invest in SIP & in Mutual Funds Click the link and start your investments instantly http://www.assetplus.in/partner/sathishkumar Sathish Kumar Equity Fund Manager | Financial Consultant | Author Whatsapp / Call –  +919841058689 http://sathishspeaks.com/ Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money Kickstart your Investment Journey of 2025 from here🤝🏻Check out Our New Course “Welcome to the World of Mutual Funds”🙌You will Learn: Actual Cost 4999/- and get it for 2499/-For First 100 Registrations as Launch Offer Buy it at 1999/- Use Code “SATHISHSPEAKS2025” Hurry Up Limited Period Offer Only!!!! Click the below link to enroll to the course and Transform your finances 👇https://webinar.sathishspeaks.com/

Summary of Popular Book – 100 to 1 in Stock Market  Read More »

Scroll to Top
×